உள்ளூர் செய்திகள்
- வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் ஏரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஏரியில் இருந்து மண் கடத்தி வந்த 2 லாரிகளை மடக்கினர். அப்போது டிரைவர்கள் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனைஅடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து, கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.