உள்ளூர் செய்திகள்

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் குடியரசு தின விழா

Published On 2023-01-28 11:36 IST   |   Update On 2023-01-28 11:36:00 IST
  • மாணவர்களுக்கு தேசிய உணர்வை தூண்டும் விதமாக சிறப்புரையாற்றினார்.
  • விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பூண்டி பள்ளியில் 74வது குடியரசு தினம் மற்றும் 33வது ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்கமாகபள்ளியின் முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி, மாணவர்களுக்கு தேசிய உணர்வை தூண்டும் விதமாக சிறப்புரையாற்றினார். மாணவர்களின் வண்ணமிகு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளாக குடியரசு தினவிழா பற்றிய இந்தி மற்றும் ஆங்கில உரை, நடனம், கராத்தே, ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் போன்றவை காண்போர் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து பள்ளியின் 33வது ஆண்டு விளையாட்டு விழா ஆரம்பமானது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஒலிம்பிக்மரியாதையை ஏ.வி.பி., டிரஸ்டி பிரதாப் உறுதிமொழியுடன்மாணவர்களுக்கு பல விளையாட்டுப்போட்டிகள்நடைபெற்றது.

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாபின் டி சௌசா 2022-23-ம்கல்வி ஆண்டிற்கான விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவின் நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News