உள்ளூர் செய்திகள்

மது என நினைத்து விஷம் குடித்த தொழிலாளி சாவு

Published On 2022-06-08 15:33 IST   |   Update On 2022-06-08 15:33:00 IST
  • விஷம் குடித்த தொழிலாளி பலியானார்.
  • மது என நினைத்து குடித்ததால் உயிரை பரித்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் மது என்று நினைத்து தவறுதலாக விஷத்தை குடித்து விட்டார். இதில் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News