உள்ளூர் செய்திகள்

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2023-01-10 15:05 IST   |   Update On 2023-01-10 15:05:00 IST
  • திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
  • இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன.

அன்னதானப்பட்டி:

சேலம் நெத்திமேடு , கேபி கரடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் ( வயது 28). இரும்பு கிரில் பட்டறை உரிமையாளர். இவர் நேற்று அன்னதானப்பட்டி அகரமகால் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்கிற அய்யாவு (35) என்பவர் திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அய்யாவு என்பவரை கைது செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News