உள்ளூர் செய்திகள்

காளியம்மன் கோவில் மீது தாழ்ந்து செல்லும் மின்கம்பிகள்.

பெரம்பூர் கோவில் மீது தாழ்ந்து செல்லும் மின்கம்பிகளை மாற்ற வேண்டும்

Published On 2023-04-18 07:27 GMT   |   Update On 2023-04-18 07:27 GMT
  • மின்கம்பியையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • திருப்பணி வேலைகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா

பெரம்பூர் ஊராட்சி காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் தலைமையில் பொதுமக்கள், கலெக்டர் மகாபாரதியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

எங்கள் ஊரில் உள்ள காளியம்மன்கோயில் மேலே மிகவும் ஆபத்தான நிலையில் மின்கம்பி தாழ்ந்து செல்வதால் கடந்த ஐந்து வருடங்களாக திருப்பணி வேலைகள் முடிந்து கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

தற்பொழுது கோயில் கும்பாபிஷேகம் செய்ய முயற்சி செய்து வருவதால் மின்சாரம் ஓடிக்கொண்டி ருக்கும் மின் கம்பியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோயிலுக்கு மேலே தாழ்ந்து செல்லும் மின்கம்பி யையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர மின்சார துறையில் பல முறை புகார் கொடுத்தும் எந்த வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளையும், மின்கம்பத்தையும் மாற்றி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News