உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

இசைக்கலைஞர் படுகொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

Published On 2022-08-09 08:05 GMT   |   Update On 2022-08-09 08:05 GMT
  • திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள பழைய லாரி பேட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
  • இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள பழைய லாரி பேட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் அடித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் அடித்து கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் யார்? எந்த ஊர் என விசாரித்து வந்த நிலையில் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தப்புள்ளியை சேர்ந்த கார்த்திக்குமார்(25) என தெரியவந்தது.

டிரம்ஸ்செட் கலைஞராக வேலை பார்த்து வந்த இவருக்கும், திண்டுக்கல் லயன்தெருவை சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ஆனந்தி கோவித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

மேலும் இவர் செல்போனில் பல ஆண்களுடன் பேசி வந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கார்த்திக்குமார் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த கொலை வழக்குகுறித்து டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர்மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

Tags:    

Similar News