உள்ளூர் செய்திகள்

துப்பாக்கி தயாரித்த கும்பல் மீண்டும் சேலம் சிறையில் அடைப்பு

Published On 2022-08-12 09:03 GMT   |   Update On 2022-08-12 09:03 GMT
  • துப்பாக்கி தயாரித்ததாக கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர் படுத்தினர்.

சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த என்ஜி னீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 24), எருமாபாளையத்தை சேர்ந்தவர் பி.சி.ஏ.பட்டதாரி நவீன்சக்ரவர்த்தி (25), அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் கபிலன் (25) .

இவர்கள் துப்பாக்கி தயாரித்ததாக கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறபபு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர் படுத்தினர்.

அப்போது 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. போலீ சார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசா ரணை வருகிற 16ந் தேதி மீண்டும் சென்னை கோர்ட்டில் நடைபெற உள்ளது.

இதையடுத்து மீண்டும் பலத்த பாதுகாப்புடன் சேலத்திற்கு அழைத்து வரப்பட்ட 3 பேரும் சேலம் மத்திய சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டனர். 

Tags:    

Similar News