உள்ளூர் செய்திகள்

பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க வேண்டும்

Published On 2023-10-09 09:33 GMT   |   Update On 2023-10-09 09:33 GMT
  • திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.
  • பாலத்தில் உள்ள விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.

இந்த பாலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த பாலம் வழியாக திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை, விழுப்புரம், சென்னை, வேலூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் இந்த சாலை போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக உள்ளது.

இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்று பாலத்தில் இணைப்பு பகுதிகளில் உள்ள இரும்பு தகடுகள் சேதம் அடைந்து பாலத்தில் விரிசல் விழுந்து வருகிறது.

இந்த விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News