உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

Published On 2022-06-08 10:07 GMT   |   Update On 2022-06-08 10:07 GMT
  • பூதலூர் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
  • வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது

பூதலூர்:

பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வள மைய பயிற்சி மையத்தில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது. பூதலூர் வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் தஞ்சை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய முதுநிலை விரிவுரையாளர் ஜெயராஜ், பூதலூர் ஒன்றிய எண்ணும் எழுத்தும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சி முகாமை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் முதல்வர் செங்குட்டுவன், பூதலூர் வட்டார கல்வி அலுவலர் ரமாபிரபா, உதவி பேராசிரியர் இளையராணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News