உள்ளூர் செய்திகள்

பூஜை செய்வதிலிருந்து கோயில் குருக்கள் விலகல்

Published On 2022-06-20 10:44 GMT   |   Update On 2022-06-20 10:44 GMT
  • நல்ல காத்தாயி அம்மன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்துவந்த சூரியமூர்த்தி குருக்கள் 18-ம் தேதி பணியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார்.
  • மேலும் குத்து விளக்குகள், கோயில் மணி மற்றும் பூஜை பொருட்களை செயல் அலுவலர் உமேஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.

சீர்காழி:

சீர்காழியை அடுத்த மன்னங்கோயில் நல்ல காத்தாயி அம்மன் கோயிலில் பூஜை செய்து வந்தவர் சூரியமூர்த்தி குருக்கள். இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் பரம்பரையாக பூஜை செய்துவந்த சூரியமூர்த்தி குருக்கள் 18-ம் தேதி பணியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளதோடு கோவில் உபயதாரர்களால் அளிக்கப்பட்ட குத்து விளக்குகள், கோயில் மணி மற்றும் பூஜை பொருட்களை செயல் அலுவலர் உமேஷ்குமாரிடம் ஒப்படைத்தார். மேற்படி கோயிலை பூட்டி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சாவியையும் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News