திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- வீராவுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரா( வயது 34). திருத்தணி அடுத்த அருங்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35).
நண்பர்களான இருவரும் நேற்று இரவு திருவள்ளூரில் இருந்து அருங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.பட்டரைப் பெரும்புதூர் முருகன் கோவில் அருகே வளைவில் திரும்பிய போது நிலைதடுமாறி இருவரும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்களை திருவள்ளூர் தாலுக்கா சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ரமேசை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். வீராவுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.