உள்ளூர் செய்திகள்

புதுவையில் ரூ.30 ஆயிரம் கடனை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை

Published On 2023-04-07 03:52 GMT   |   Update On 2023-04-07 03:52 GMT
  • தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கினார்.
  • தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி.

இவரிடம், நவீனா கார்டன் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை நீண்ட நாட்கள் ஆகியும் கண்ணன் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கண்ணனிடம் அடிக்கடி சென்று ரஞ்சித்குமார், தனது பணத்தை தருமாறு கேட்டுள்ளார். நேற்று இரவும் கண்ணனின் வீட்டுக்கு சென்று ரஞ்சித்குமார் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

Tags:    

Similar News