உள்ளூர் செய்திகள்

விண்ணப்பித்தும் கிடைக்காததால் ஆத்திரம்: கலைஞர் உரிமை தொகை கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்

Published On 2023-10-20 06:09 GMT   |   Update On 2023-10-20 06:09 GMT
  • கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை.
  • கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் 500 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 300 மகளிருக்கு விண்ணப்பித்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை என்றும், இதற்காக தாலுகா, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மேல்முறையீடு செய்தும் பலனில்லை என்றும், அலைகழிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் உரிமைத்தொகை குறித்து அதிகாரிகளிடம் இருந்து நடந்து எந்த முறையான பதிலும் வராததாலும், உரிமைத்தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கடுவெளியில் திருவையாறு -திருக்காட்டுப்பள்ளி சாலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறுத்து நிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News