உள்ளூர் செய்திகள்
வண்டலூர் கோவில் குளத்தில் வாலிபர் பிணம்
- வீட்டின் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது28). இவர் வீட்டின் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பாலாஜி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.