உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்து 4 பேர் தத்தளிப்பு

Published On 2023-05-13 06:01 GMT   |   Update On 2023-05-13 06:01 GMT
  • கீழவைப்பாறு பகுதியை சேர்ந்த 4 பேர் வந்து கொண்டிருந்த பைபர் படகு பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்தது.
  • மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றினர்.

தூத்துக்குடி:

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியை சே்ாந்த மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் கரை திரும்பினர். இன்று அதிகாலை கீழவைப்பாறு பகுதியை சேர்ந்த 4 பேர் வந்து கொண்டிருந்த பைபர் படகு பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த 4 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். அதனை பார்த்த மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் படகுகள் மூலம் அவர்களை கரைக்கு அழைத்து வருகின்றனர்.

மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் மீனவர்களை கரைக்கு அழைத்து வரும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று பிற்கலில் தூத்துக்குடிக்கு வருவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News