உள்ளூர் செய்திகள்

டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2023-08-07 11:28 GMT   |   Update On 2023-08-07 11:28 GMT
  • டிராக்டரில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது.
  • உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்திரமேரூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் சேலத்தை சேர்ந்த ரமேஷ் (வயது40) என்பவர் கடந்த 15 நாட்களாக நெற்பயிரை அறுவடை செய்து வந்தார். பணி முடிவடைந்த நிலையில் அறுவடை செய்த வைக்கோலை தனது டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சேலம் செல்வதற்காக ரமேஷ் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

குண்ணவாக்கம் கூட்ரோடு அருகே வந்தபோது டிராக்டரில் மின்கசிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த ரமேஷ் டிராக்டரில் இருந்து கீழே இறங்கினார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உத்திரமேரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து உத்தரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News