உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருகே டிராக்டர் மோதி 7 மாத கர்ப்பிணி 1½ வயது குழந்தை பலி

Published On 2022-07-19 07:50 GMT   |   Update On 2022-07-19 07:50 GMT
  • முத்தனூர் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
  • குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தானகவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 30).

இவரது மனைவி மணிமேகலை (25) தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

தம்பதிக்கு 1½ வயதில் துரைமணி என்ற குழந்தை இருந்தது. இன்று ராஜதுரை, மணிமேகலை குழந்தை துரைமணி ஆகிய 3 பேரும் பைக்கில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தனர்.

முத்தனூர் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய மணிமேகலையை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News