உள்ளூர் செய்திகள்

கூடுதல் விலைக்கு மது விற்ற பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு

Published On 2023-02-06 14:57 IST   |   Update On 2023-02-06 14:57:00 IST
  • கூடுதல் விலைக்கு மதுவிற்ற 4 பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • 534 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 4 பெண்கள் உள்பட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 534 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News