உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் மதுக்கடை அருகே வாலிபர் மர்ம மரணம்

Published On 2023-01-20 06:17 GMT   |   Update On 2023-01-20 06:17 GMT
  • திருக்கழுக்குன்றம் அருகே குன்னப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம்.
  • மதுக்கடை அருகே வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் அருகே குன்னப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 46) இவர் திருக்கழுக்குன்றம் வடக்கு பட்டு பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே மர்மமாக இறந்து கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுரங்கம் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News