உள்ளூர் செய்திகள்
திருவள்ளுவர் நகர் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா- நலத்திட்ட உதவிகளை ஏ.எம்.விக்கிரமராஜா வழங்கினார்
- முப்பெரும் விழா திருவள்ளுவர் நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடந்தது.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருவள்ளுவர் நகர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 30-வது ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா திருவள்ளுவர் நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடந்தது. செயல் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார. செயலாளர் பெப்சி நாராயணன் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். என்.டி.மோகன், தேசிகன், சின்னவன், ராதா கிருஷ்ணன், மகேந்திரன், சுதர்சன், மீனாட்சி சுந்தரம், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.