உள்ளூர் செய்திகள்

திருவாலங்காடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-11-01 17:26 IST   |   Update On 2022-11-02 15:02:00 IST
  • போலீசார் நேற்றுமுன்தினம் சின்னம்மாபேட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் சின்னம்மாபேட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த மகேஷ் குமார் (வயது 21), சின்னம்மா பேட்டையை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 20) ஆகிய 2 பேரும் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News