உள்ளூர் செய்திகள்

கூவத்தூர் அருகே மணல் கடத்தலை போலீசுக்கு தெரிவித்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-01-02 12:13 IST   |   Update On 2023-01-02 12:13:00 IST
  • கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து தப்பி ஓட முயன்ற பிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர்.
  • கைதான பிரகாசை போலீசார் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

மாமல்லபுரம்

கூவத்தூர் அடுத்த ஆயப்பாக்கம் அருகே உள்ள நத்தம்பகுதியில் பாலாற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. ஆட்டோ மற்றும் லாரிகள் மூலம் தொடர்ந்து மணல் திருட்டு நடக்கிறது.

இந்த மணல் கடத்தல் குறித்து அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா என்பவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே சாதிக்பாஷா கூவத்தூர் பழைய ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் திடீரென அரிவாளால் வெட்டினார். இதில் அதிஷ்டவசமாக சாதிக் பாஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து தப்பி ஓட முயன்ற பிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தெரிவித்ததால் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை முயற்சி நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைதான பிரகாசை போலீசார் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Similar News