உள்ளூர் செய்திகள்

கல்லூரி கட்டணத்தை வைத்து ரம்மி விளையாடிய பீகார் மாணவர்- தந்தை திட்டியதால் மாயமானார்

Published On 2022-11-05 08:49 GMT   |   Update On 2022-11-05 08:49 GMT
  • கல்லூரி கட்டணத்திற்காக தனது தந்தை கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சரத்குமார் திவாதி இழந்துள்ளார்.
  • நேற்று மாலை முதல் சரத்குமார் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு விடுதிக்கும் வராமல் மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை.

சென்னை:

சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருபவர் சரத்குமார் திவாரி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரி கட்டணத்திற்காக தனது தந்தை கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சரத்குமார் திவாதி இழந்துள்ளார். பின்னர் மீண்டும் தந்தையிடம் பணம் கேட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மாணவனை திட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் சரத்குமார் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு விடுதிக்கும் வராமல் மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை. இது தொடர்பாக மாணவனின் தந்தை போன் மூலம் ராயலா நகர் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News