உள்ளூர் செய்திகள்
மறைமலைநகர் அருகே கடையை உடைத்து கொள்ளை
- கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இது குறித்து மறைமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
மறைமலைநகர் அடுத்த பொத்தேரி குமரன் முதல் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். பொத்தேரி அண்ணா தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
காலையில் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மறைமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.