உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே கோவிலில் சாமி சிலை கொள்ளை

Published On 2023-10-28 06:25 GMT   |   Update On 2023-10-28 06:25 GMT
  • வேணுகோபால்சாமி உலோக சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
  • கோவில் நிர்வாகிகள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தில் வேணுகோபால்சாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள 5 கிலோ எடை கொண்ட வேணுகோபால்சாமி உலோக சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் நிர்மலா ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதே போல் செங்கரை கிராமத்த்தில் காட்டுச் செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியாததால் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tags:    

Similar News