உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் உலா வந்த முகமூடி கொள்ளையனை நாய்கள் விரட்டும் காட்சி.

களக்காட்டில் முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம்: சி.சி.டி.வி. காட்சிகளால் பரபரப்பு

Published On 2022-07-06 04:46 GMT   |   Update On 2022-07-06 04:46 GMT
  • கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்பத்தில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
  • இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில் முகமூடி கும்பல் நடமாடிய காட்சிகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு கோவில்பத்து பகுதியில் நேற்றிரவில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் 2 பேர் சுற்றி வந்துள்ளனர். அவர்கள் வீடுகளின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் நாய்கள் சத்தம் போட்டு விரட்டியதால் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அப்பகுதி வீடுகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகி உள்ளது. இரவில் முகமூடி கொள்ளை கும்பல் நடமாடும் காட்சிகள் மற்றும் நாய்கள் விரட்டும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில்பத்தில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில் முகமூடி கும்பல் நடமாடிய காட்சிகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News