உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த 74-வது குடியரசு தின விழா

Published On 2023-01-26 09:56 GMT   |   Update On 2023-01-26 09:56 GMT
  • அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 17 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
  • விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலுவலர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

திருவள்ளூர்:

திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மேலும் அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 17 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 7 ஆயிரத்து 456 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 23 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 373 அலுவலர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள், பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் சீப்பாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தா சுக்லா, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீ வத்சன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவர்கலால், வட்டாட்சியர் மதியழகன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News