உள்ளூர் செய்திகள்

வல்லூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2023-02-20 06:06 GMT   |   Update On 2023-02-20 06:06 GMT
  • அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது.
  • மின் உற்பத்தி தொடங்க பழுதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொன்னேரி:

அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

மின் உற்பத்தி தொடங்க பழுதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கொதிகலன் பழுது விரைவில் சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News