உள்ளூர் செய்திகள்

வடபழனியில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தது- போலீஸ் விசாரணை

Published On 2022-11-21 09:19 GMT   |   Update On 2022-11-21 09:19 GMT
  • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
  • தீ விபத்தில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

போரூர்:

சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு சாலையோரம் கார்கள் அடுத்தடுத்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் அங்கிருந்த ஒரு காரில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. அப்போது காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த மற்றொரு காருக்கும் தீ பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News