உள்ளூர் செய்திகள்

தந்தை மீது பொய்வழக்கு போட்டதாக கூறி நெல்லை கோர்ட்டில் அக்காள்-தம்பி தீக்குளிக்க முயற்சி

Published On 2023-02-07 14:23 IST   |   Update On 2023-02-07 14:23:00 IST
  • சிறுமி கூறும்போது, போலீசார் என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கி எனது தந்தை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நெல்லை:

தென்காசி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அந்த தொழிலாளியின் 17 வயது மகள், 15 வயது மகன் ஆகியோர் கோர்ட்டில் இன்று திடீரென தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றியவாறு கோர்ட்டின் மாடியில் ஓடியவாறு தீக்குளிக்க முயன்றனர்.

இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் இருவரையும் மீட்டு, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கூறும்போது, போலீசார் என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கி எனது தந்தை மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இன்று அந்த வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவருக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் தீக்குளிக்க முயன்றோம் என கூறிஉள்ளார்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News