உள்ளூர் செய்திகள்
பெருங்களத்தூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி
- குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம், நாராயணன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). செங்கல்பட்டு படாளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பார்த்தசாரதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான பார்த்தசாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.