உள்ளூர் செய்திகள்
பெரியபாளையம் அருகே மாடுமுட்டி மூதாட்டி பலி
- பெரியபாளையம் அருகே நெய்வேலி கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் முனியம்மாள்.
- பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே நெய்வேலி கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 69). இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.அப்பொழுது அவ்வழியே சென்ற மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு ஓடி வந்து முனியம்மாளை முட்டி கீழே தள்ளியது.
இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.