உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு-அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Published On 2023-02-01 18:12 GMT   |   Update On 2023-02-01 18:12 GMT
  • சின்ன காவனம் பகுதியில் ஏலியம்பேடு-பழவேற்காடு சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • சாலை விரிவாக்கப்பணிக்கு வீடு, கோவில்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த சின்ன காவனம் பகுதியில் ஏலியம்பேடு-பழவேற்காடு சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில் உள்ளபெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்ன காவனம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் 5 கோவில்கள் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட இருக்கிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சாலை விரிவாக்கப்பணிக்கு வீடு, கோவில்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டத்தில் இருந்து சிலர் வெளிநடப்பு செய்தனர்.  இதனால் கூட்டத்தில பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News