உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

Published On 2023-09-05 12:31 IST   |   Update On 2023-09-05 12:31:00 IST
  • மூதாட்டி இறந்து கிடந்தார். அவரது தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
  • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி:

பொன்னேரி ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். அவரது தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பலியான மூதாட்டி யார்? எந்த ரெயிலில் பயணம் செய்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News