உள்ளூர் செய்திகள்

தமிழக கோவில்களிலும் பிரசாதம் கொடுக்க பனைஓலை பைகளை பயன்படுத்த வேண்டும்- என்.ஆர்.தனபாலன் கோரிக்கை

Published On 2023-03-03 09:48 GMT   |   Update On 2023-03-03 09:48 GMT
  • திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதத்தை பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளில் வைத்து கொடுத்து வருகிறார்கள்.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூ, மாலைகள் வைக்கவும், பிரசாதங்கள் கொடுக்கவும் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளை அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதத்தை பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளில் வைத்து கொடுத்து வருகிறார்கள். இதே போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூ, மாலைகள் வைக்கவும், பிரசாதங்கள் கொடுக்கவும் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பைகளை அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யும்போது தமிழகத்தில் உள்ள 10 லட்சம் பனைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படும். ஆண்டுதோறும் பனைத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News