உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் 9 பேர் பலி: என்.ஆர்.தனபாலன் இரங்கல்

Published On 2023-03-23 09:28 GMT   |   Update On 2023-03-23 09:28 GMT
  • பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது.
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

சென்னை :

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காஞ்சிபுரம் பட்டாசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள 3 லட்சம் போதுமானதல்ல, தொழிலாளர்களின் உயிர் இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது என்பதை அரசு கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் தலா ரூ. 2 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News