உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் அருகே வடமாநில பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
- பூஜாவிற்கு 3 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.
- தாய்-சேய் இருவரையும் பாதுகாப்பாக திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்த வடமாநில பெண் பூஜா (வயது 28).
நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மதியம் திடீரென இடுப்பு வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவைத்து அதில் ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற் சித்தனர்.
ஆம்புலன்ஸ் உள்ளே படுக்கவைக்கப்பட்ட பூஜாவால் வலி தாங்க முடியாமல் கதறினார். இதை கவனித்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜெயக்குமார் குழந்தை வெளியேறுவதை உறுதி செய்து, டிரைவர் ஸ்டாலின் உதவியுடன் பெண்ணின் உறவினர்கள் மத்தியில் பிரசவம் பார்த்தனர். இதில் பூஜாவிற்கு 3 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாய்-சேய் இருவரையும் பாதுகாப்பாக திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் நலமுடன் உள்ளனர்.