உள்ளூர் செய்திகள்

வருகிற 6-ந்தேதி கடைசி நாள்: செங்கல்பட்டு-திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-03 11:01 GMT   |   Update On 2022-07-03 11:02 GMT
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜுன் 1-ந்தேதி நிலவரப்படி 414 காலி பணியிடங்கள் உள்ளன.
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள இடை நிலை, பட்டதாரி. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 23-ம் தேதி தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதற்கிடையே 13 ஆயிரத்து 391 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் ஜூன் 2-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 6-ந்தேதி மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி காஞ்சீபுரம் கல்வி மாவட்டம்_deokpm@gmail.com, ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டம்-depsripdr@gmail.com.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் தகுதியானவர்கள் விண்ணப்பங்களை நேரடியாகவோ, அலுவலகங்களின் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

திருத்தனி கல்வி மாவட்டம் -deotiruttani@gmail.com, திருவள்ளூர் கல்வி மாவட்டம் deotlr@nic.in. ஆவடி கல்வி மாவட்டம்-deoaavadi@gmail.com, அம்பத்தூர் கல்வி மாவட்டம் -deoambt@gmail.com, பொன்னேரி கல்வி மாவட்டம்-deopont@nic.in. இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜுன் 1-ந்தேதி நிலவரப்படி 414 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

எனவே வரும் 6-ந்தேதிக்குள் செங்கல்பட்டு, மதுராந்தகம், புனித தோமையார் மலை ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களில் தகுதி உடையவர்கள் மின் அஞ்சல் மூலம் மற்றும் நேரிலும் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News