உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-10-13 12:30 IST   |   Update On 2022-10-13 12:30:00 IST
  • தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகனும், மகனின் நிலைமையை எண்ணி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
  • தாய்-மகன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 72). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்புலட்சுமி மகன் கணேசன் (53). தச்சுத்தொழிலாளியான இவர் பாலவனத்தத்தில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கணேசனுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் வயதான தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை என்ற வருத்ததிலும் கணேசன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கடம்பன்குளத்தில் உள்ள தாயை சந்தித்து விட்டு வருவதாக கணேசன் வீட்டில் கூறிவிட்டுச் சென்றார். அங்கு தாயிடம் பேசிய கணேசன் தனது உடல்நல பாதிப்பு குறித்து கூறி கவலையடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரது தாயார் சுப்புலட்சுமியும் தனது நிலைமை குறித்து கூறியுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த விஷத்தை தாயும் மகனும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய்-மகன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகனும், மகனின் நிலைமையை எண்ணி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News