உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூலிக்க தீர்மானம்

Published On 2023-01-28 06:53 GMT   |   Update On 2023-01-28 06:53 GMT
  • மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
  • வரி பாக்கியை நீதிமன்றம் மூலமாகவும் நேரில் சென்று வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் செயல் அலுவலர் வெற்றியரசு துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குடிநீர், மழை நீர், கால்வாய், மின்விளக்கு, சாலை அமைத்தல் மற்றும் வியாபாரிகள் 1988 முதல் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 6.80 லட்சம் வரி பாக்கியை நீதிமன்றம் மூலமாகவும் நேரில் சென்று வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News