உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித்துறை ஆய்வு கூட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

Published On 2022-08-18 09:45 GMT   |   Update On 2022-08-18 09:45 GMT
  • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
  • அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏக்கள் சுந்தர், எழிலரசன், எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ். பாலாஜி, மற்றும் மேயர்கள், துணை மேயர்கள், மண்டல குழு தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News