உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது

Published On 2022-11-12 16:07 IST   |   Update On 2022-11-12 16:07:00 IST
  • சிங்காரவேலன் தெருவில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்.
  • கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சிங்காரவேலன் தெருவில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு அதிக விலைக்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்று கொண்டிருந்த காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News