உள்ளூர் செய்திகள்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மத்திய மாவட்ட மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-10 09:00 GMT   |   Update On 2023-03-10 09:00 GMT
  • சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி உமா தலைமையில் சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் கண்டன போராட்டம் நடந்தது.

சென்னை:

சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆணைக்கிணங்க மகளிர் காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி உமா தலைமையில் சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் கண்டன போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவி துகினா சந்திரசேகர், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஸ்டீபன், மாநில பொதுச்செயலாளர் காண்டீபன், மாநில ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், மாவட்ட தலைவர் ஷாகீர் அகமது, மகளிரணி நிர்வாகிகள் சியாமளா, இந்திராகாந்தி, லதா, ரிஸ்வானா, கீர்த்திகா பிரியதர்ஷினி, மோனிஷா, சுஜாதா, சுதா ஸ்டெல்லா, மேரி, கலை, மகேஸ்வரி உள்ளிட்ட மகளிரணியினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதி பொன்னம்பலம், வில்லியம்ஸ், பகுதி தலைவர்கள் பால கிருஷ்ணன், கோபால சுந்தரம் மற்றும் சிலம்பன், ஜெயக்குமார், ஜே.டி.சாலமன், அருள்தாஸ், பூக்கடை ஜீவா, ஏழுமலை, அலெக்ஸ் பிள்ளை, ராதா கிருஷ்ணன், நடராஜன் பிரகாஷ், ரவிசந்திரன், சொக்கலிங்கம், சுரேஷ், மோகன், சந்துரு, இளைய ராஜா, ராயல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News