உள்ளூர் செய்திகள்
லாரியில் இருந்து கயிறு அவிழ்ந்து, வாலிபரின் கழுத்தில் விழுந்து அவரை இழுத்து செல்லும் காட்சி.

லாரி கயிறு அவிழ்ந்து வாலிபரை இழுத்து சென்ற பதற வைக்கும் காட்சி- சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

Published On 2022-12-15 12:21 IST   |   Update On 2022-12-15 12:21:00 IST
  • ஏரல் பஜாரில் லாரி வந்தபோது லாரியில் இருந்த ஒரு உரமூட்டை கீழே விழுந்தது.
  • உரமூட்டை கட்டப்பட்டிருந்த கயிறு சாலையில் விழுகிறது.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சங்கரசுப்பு மகன் முத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக ஏரலுக்கு சென்றுள்ளார். அப்போது வெளியூரில் இருந்து ஏரலுக்கு உரம் ஏற்றி ஒரு லாரி வந்துள்ளது. அந்த லாரியை கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

ஏரல் பஜாரில் லாரி வந்தபோது லாரியில் இருந்த ஒரு உரமூட்டை கீழே விழுந்தது. இதனால் உரமூட்டை கட்டப்பட்டிருந்த கயிறு சாலையில் விழுகிறது. அந்த சமயத்தில் முத்து அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த கயிறு அவரின் கழுத்தில் விழுந்துள்ளது.

இதில் முத்து தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த ஒரு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News