உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நிலஅளவை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-25 10:39 GMT   |   Update On 2023-01-25 10:39 GMT
  • ஆர்ப்பாட்டத்தின் போது, களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
  • உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்கள் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்கிட வேண்டும்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் தாலிப், மாவட்ட செயலாளர் பிரதீப் நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மெல்கி ராஜா சிங் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும். உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்கள் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்கிட வேண்டும்.

துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News