உள்ளூர் செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தல்- விடுதலை சிறுத்தைகள் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமனம்
- இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பணி செய்யும் வகையில் தேர்தல் பணிக்குழுவை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்து உள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 14 நிர்வாகிகள் இடம்பெற்று உள்ளனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பணி செய்யும் வகையில் தேர்தல் பணிக்குழுவை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார்.
அக்குழுவில் இடம்பெற்றுள்ள 14 நிர்வாகிகள் வருமாறு:-
முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, உஞ்சை அரசன், துணை பொதுச்செயலாளர் கனியமுதன், கருத்தியல் பரப்பு செயலாளர் சிபிசந்தர், மண்டல அமைப்பு செயலாளர் இரா.கிட்டு, பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் எஸ்.எம்.சாதிக், ஆல்ட்ரின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், தெற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், நிர்வாகிகள் அரசாங்கம், அக்பர் அலி, பைசல் அகமது, அகர முதல்வன், அம்ஜத்கான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.