உள்ளூர் செய்திகள்

அவதூறு கருத்து- தி.மு.க. நிர்வாகி கைது

Published On 2022-08-22 16:49 IST   |   Update On 2022-08-22 16:49:00 IST
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தி குறித்து சில அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
  • பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் பொம்மு சுப்பையா தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் கார்த்திக். இவர் தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகியாக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ண ஜெயந்தி குறித்து சில அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இது குறித்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் பொம்மு சுப்பையா தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் லோகேஷ் கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News