உள்ளூர் செய்திகள்

வீட்டில் பிடிபட்ட முதலையை வனத்துறையினர் ஏரியில் விடுவித்தனர்.


சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த முதலை

Published On 2024-02-12 06:22 GMT   |   Update On 2024-02-12 06:26 GMT
  • வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.
  • வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள அப்துல்ரசித் வீட்டில் சுமார் 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடையுள்ள முதலை ஒன்று இன்று காலை புகுந்தது.

இத்தகவலின் படி சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு தலைமையில் வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர் அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர்.

அங்கிருந்த முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

Tags:    

Similar News