உள்ளூர் செய்திகள்

குரோம்பேட்டையில் மின்சார ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2023-04-19 08:41 GMT   |   Update On 2023-04-19 08:41 GMT
  • குரோம்பேட்டையில் மின்சார ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
  • தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாம்பரம்:

செங்கல்பட்டை சேர்ந்தவர் பெட்ரிக் ஸ்டீபன் (வயது28). இவர் இன்று காலை குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மின்சார ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பெட்ரிக் ஸ்டீபன் எதற்காக குரோம்பேட்டை வந்தார்? என்பது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News