உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் 7 ரூபாய் உயர்வு

Published On 2023-03-04 05:26 GMT   |   Update On 2023-03-04 06:45 GMT
  • நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி வளர்ப்போர் கூட்டத்தில் முட்டைகோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 67 ரூபாயாக நீடிக்கும் என அறிவிப்பு.
  • முட்டை விலை 440 காசுகளாக நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 30 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்ககப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 7 ரூபாய் உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி 75 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 82 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி வளர்ப்போர் கூட்டத்தில் முட்டைகோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 67 ரூபாயாக நீடிக்கும் என்றும், முட்டை விலை 440 காசுகளாகவும் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News